Wednesday, 6 November 2013

ஓநாயும் ஆட்டுக்குட்டியும்



இன்று விஜய் டிவியில் படம் பார்த்தேன் .. படம் பார்பதற்க்கு முன்பே பல்வேறு கமெண்ட்ஸ் , விமர்சனங்கள் ,, தொலைக்காட்சிகளில் பட குழுவினர் ..பல்வேறு இயக்குனர்கள் புகழ்ந்து பாராட்டி தீர்த்து விட்டார்கள்

..இது ஒரு புறம் ..தமிழ் சினிமா ..உலகமே பார்க்காத புதிய பாதைக்கு திரும்பி இருப்பதாவும் ..அடுத்து மிஷ்கின் ஹாலிவுட் படங்கங்ளை விட அடுத்த ஸ்தானதிற்க்கு கொண்டு செல்வதாகவும்..ஐயோ காது கூசும் அல்லது செவிடாகும் அளவுக்கும் படம் வெளியான முதல் வாரம் முழுவதும் பிரச்சாரம் செய்யப்பட்டது 

அல்லது விளம்பரம் செய்யப்பட்டது ..மிஷ்கின் சார் உங்க சித்திரம் பேசுதடி படம் அறிமுக இயக்குனராக எவ்வளவு முடியுமோ அதை செய்தீர்கள் பின்பு அஞ்சாதே படம் பார்த்து நான் பார்க்கும் நண்பர்கள் அனைவரிடமும் பல மாதங்கள் படம் கதையும் ,திரைக்கதையும் காட்சி அமைப்பையும் கோணங்களையும் பேசி பேசி இப்போது வரை எனக்கு சலித்ததில்லை..இன்று வரை நீங்கள் ஒரு இயக்குனராக மின்னிய ஒரேபடம் அதுதான்...

கதை களம் எப்படியிருந்தாலும் சொல்லப்படும் விதம்தான் வெற்றி தோல்விகளை தீர்மானிக்கிறது..இப்படம் திரைப்பட ரசிகர்கள் மனதில் ஒருகாலும் ஞாபக்கதிற்கு வராத படங்களில் ஒன்றாக நிச்சயமாய் இருக்கும்...ஒரு காட்சி அமைப்பு கூட மனதில் ஒட்டவில்லை..பீஸ் பீசாய் சீன்கள் ...படத்தின் படு தோல்வி கதை ..திரைக்கதை...ஓளிப்திவு..இசை..போட்டி போட்டுக்கொண்டு படத்தை காலி செய்துவிட்டன..

சராசரி சினிமா (அ) நல்ல சினிமா ..இந்த இரண்டில் சினிமா ரசிகனுக்கும் ..சினிமாவுக்கும் படு தோல்வியே

..25 ஆண்டுகளுக்கு முன்பு பாலசுப்பிரமணியர் திரையரங்கில் கார்த்திக் நடித்த என் ஜீவன் பாடுது என்று படம் ..அப்படி ஒரு கேவலமான படம் ..முடியும் வரை ஒன்றுமே விளங்காது ..பாடல்கள் சில நன்றாக இருக்கும் ..ஒரு காட்சியில் காதலிக்கு ...என்ன வாங்கலாம்.. என்ன வாங்கலாம்...என்று ஒரு வசனம் வரும் .பத்து ரூபாய் கொடுத்து டிக்கெட் வாங்கிய ரசிகன் .................டேய் ...நான் டிக்கெட் வாங்கிய 10 ரூபாய மொதல்ல திருப்பி குடுடா வெறியில் கத்தினான் ..தியேட்டரே கைதட்டலால் அதிர்ந்தது படம் மிக சரியாக 2 நாட்களே ஓடியது.. 

திருவண்ணாமலையில் 1.2 நாட்கள் ஓடிய படங்கள் நிறைய உண்டு ஒரு சில ஆண்டுகளுக்கு முன் புகழ் திரையரங்கில் 2 காட்சிகள் மட்டும் ஓடிய படமும் உண்டு ...25 ஆண்டுகளுக்கு பிறகு அதே மனநிலை .. 

இயக்கம் : மிஷ்கின் .இசை :இளையராஜா இந்த இரண்டு பேரும் போஸ்டரில் இருந்திராவிட்டால் மேற் சொன்ன நிலை கண்டிப்பாக நிகழ்ந்திருக்கும் இதில்வேறு நீங்கள் தான் முதன் முதலாக இளையராஜாவின் மகத்துவம் அறிந்தவர் போல் முன்னணி இசை என்று அறிமுகம்....உலகின் எந்த மொழி படமானாலும் பின்னணி இசை தான்...

இப்படித்தான் ..cinematography ..ஒருவர் art of light ..ஒலி ஓவியர்..சந்தேகமே வேண்டாம் சாட்சாத் தங்கர்பச்சான் தான்..அழகி படத்திற்கு பிறகு நானே சினிமா ..தமிழ் சினிமாவுக்கு யார் வந்தாலும் நானே ..என்படம்தான் நுழைவு வாயில் என்றார் ..இப்போது சினிமாவில் மட்டுமல்ல சென்னையில் இருக்கிறாரா தெரியவில்லை..

படம் தோல்வி அடைந்தபின் பணத்தை தயாரிப்பளர்கள் ..நடிகர்கள் பணத்தை சம்மந்த பட்டவருக்கு சிறிது திருப்பி கொடுத்ததாக வரலாறு உண்டு...நீங்களும் இதை பரீசிiலிக்கலாம்..பணத்தை உங்களை நம்பி வந்த ரசிகனுக்கு கொடுத்து...

நீங்கள் சில ஆண்டுகளுக்கு எங்கேயும் தொலைகாட்சிகளில் தினசரி ..வார இதழ்களில் பேசாமல் இருப்பது மிகவும் உங்களுக்கும் 

முக்கியமாக எங்களுக்கும் நல்லது....

No comments:

Post a Comment