Sunday, 26 May 2013

நல்ல பிள்ளைகள் எத்தனை தந்தைக்கு வாய்க்கிறார்கள்.




23.05.2013 அன்று திருக்கோவிலூரை சேர்ந்த மருத்துவர் மகளின் திருமணதிற்கு வீடியோபதிவு செய்ய விழுப்புரம் சென்றிருந்தோம் நாதஸ்வரம் வாசித்த பெரியவர் ஒய்வு நேரத்தில் சக கலைஞர்களை என்னிடம் அறிமுகம் செய்தார். இருமகன்களும் தவில் வாசிக்கிறார்களாம். இளையமகன் எம்.சி.ஏ படித்துவிட்டு சென்னையில் நல்ல உத்தியோகத்தில் உள்ளதாக சொன்னார். தன் மகன் எம்.சி.ஏ படித்திருப்பதாய் சொல்லும்போது அவரிடம் ஒரு சந்தோஷம் தெரிந்தது. 

ன்று வேலைக்கு லீவு போட்டுவிட்டு தவில் வாசிக்க வந்ததாக சொன்னார். எம்.சி.ஏ படித்திருப்பது அவர் குடும்பத்திற்க்கு அல்லது அவருடன் பணிபுரிபவர்களுக்கு மட்டுமே தெரியும். ஆனால் இன்று இந்த திருமணத்தில் இரண்டாயிரம் பேர் அவர் தவில் திறமையை கண்டு மெய் மறந்ததாக சொன்னேன். சரஸ்வதி சிலரிடம் மட்டுமே வாழ்கிறாள். கலை எப்பொழுதும் காசு, பணம், சாதிகளை கடந்தது. உங்கள் மகன் எம்.சி.ஏ என்பதை விட நல்ல தவில் கலைஞன் என்பதில் மேலோங்கி நிற்கிறார் என்றேன். தந்தையின் கண்களில் அப்படி ஒரு சந்தோஷம். என் இரண்டு கைகளையும் பற்றிக்கொண்டார்.

மிக சாதாரணமான டிகிரி அல்லது சாதாரண படிப்பை படித்துவிட்டு வேலைக்கு செல்லாமல், வேறு எந்த திறமையும் இல்லாமல் ஊர் சுற்றும் பலருக்கு இவர் ஒரு முன்னுதாரணம். ( என் பையன் அந்த பள்ளியில் படிக்கிறான், அந்த காலேஜ்ஜில் படிக்கிறான், அவரைப்போல வருவான், இவரைப்போல வருவான் என வெத்து பந்தா காட்டும் பெற்றோர்களும் அடக்கம் ).

இப்படி பல நல்ல பிள்ளைகள் எத்தனை தந்தைக்கு வாய்க்கிறார்கள்.

No comments:

Post a Comment